நகப் பராமரிப்பு:
நீளமாக நகம் வளர்க்க நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், அது முதலுக்கே மோசம் செய்துவிடக் கூடும். எவ்வளவு நீளமாக வளர்க்க ஆசைப்படுகிறீர்களோ, அவ்வளவு ஆபத்து. அதனால் அளவாக வளர்த்து வளமாக வாழுங்கள். கையால் சாப்பிடுவதற்கும் நீளமற்ற நகமே ஏற்றது.
# நகங்களை நீண்ட நேரத்துக்குத் தண்ணீரில் முக்கி வைத்திருக்காதீர்கள். நகங்கள் சீக்கிரமாக உடைந்து போக, அது வழிவகுக்கும்.
# உணவில் வைட்டமின் பி7 ஊட்டச்சத்தைச் சேர்த்துக்கொள்ளப் பாருங்கள். இது நகம் வளர உதவும்.
# நகங்களில் வெள்ளைத் திட்டுகள், கறைகளைப் போக்க எலுமிச்சை சாறைப் பயன்படுத்துங்கள். இது இயற்கையானது, நகங்களுக்குக் கேடு விளைவிக்காது.
பருக்கள் மறைய
# துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.
# நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.
# வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.
# பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.
# சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.
முகம் பளபளப்பாக: முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.
வசீகரம் பெற: அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சம அளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.
வறண்ட சருமத்துக்கு: உடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அவ்வப்போதுச் சாப்பிட்டு வரவேண்டும்.
நன்றி: tamil.thehindu
நீளமாக நகம் வளர்க்க நீங்கள் ஆசைப்படலாம். ஆனால், அது முதலுக்கே மோசம் செய்துவிடக் கூடும். எவ்வளவு நீளமாக வளர்க்க ஆசைப்படுகிறீர்களோ, அவ்வளவு ஆபத்து. அதனால் அளவாக வளர்த்து வளமாக வாழுங்கள். கையால் சாப்பிடுவதற்கும் நீளமற்ற நகமே ஏற்றது.
# நகங்களை நீண்ட நேரத்துக்குத் தண்ணீரில் முக்கி வைத்திருக்காதீர்கள். நகங்கள் சீக்கிரமாக உடைந்து போக, அது வழிவகுக்கும்.
# உணவில் வைட்டமின் பி7 ஊட்டச்சத்தைச் சேர்த்துக்கொள்ளப் பாருங்கள். இது நகம் வளர உதவும்.
# நகங்களில் வெள்ளைத் திட்டுகள், கறைகளைப் போக்க எலுமிச்சை சாறைப் பயன்படுத்துங்கள். இது இயற்கையானது, நகங்களுக்குக் கேடு விளைவிக்காது.
பருக்கள் மறைய
# துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.
# நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.
# வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.
# பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.
# சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.
முகம் பளபளப்பாக: முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.
வசீகரம் பெற: அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சம அளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.
வறண்ட சருமத்துக்கு: உடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அவ்வப்போதுச் சாப்பிட்டு வரவேண்டும்.
நன்றி: tamil.thehindu
No comments:
Post a Comment